ஊட்டி: ஊட்டி அருகே மரம் விழுந்து கேரளாவை சேர்ந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் 8 நாட்கள் முன்னதாகவே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.