கனமழை எச்சரிக்கை: நீலகிரி, கோவையில் திங்கள்கிழமையும் ரெட் அலர்ட்!

4 hours ago 3

சென்னை: தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை (மே 26) அதிகனமழையும், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்து, வட கர்நாடகத்தின் உள்பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்ககூடும். மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 27-ம் தேதி உருவாகக்கூடும்.

Read Entire Article