விழுப்புரம்: விழுப்புரம் நகரில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் நேருஜி வீதி - கிழக்கு பாண்டி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டன.
விழுப்புரம் நகரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து ராகவன்பேட்டை வரை நேருஜி வீதி மற்றும் கிழக்கு பாண்டி சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதேபோல் முத்தாம்பாளையம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு முதல் ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் வரை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.