விளை நிலங்கள் அருகே சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் விபரீதம் ஏற்படும் அபாயம்

3 months ago 19

 

சாத்தூர், அக்.21: சாத்தூர் அருகே சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரத்தில் இருந்து ஓ.மேட்டுப்பட்டி செல்லும் சாலை ஓரமாக மின் கம்பங்கள் உள்ளன. இதில் 6 மின்கம்பங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த காற்று, மழையால் சாய்ந்து கிடக்கிறது.

ஒரு வார காலமாகியும் விளை நிலங்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சரி செய்யாமல் உள்ளனர். இதனால் விளை நிலங்களுக்கு செல்லும் பொதுமக்கள், கால் நடைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post விளை நிலங்கள் அருகே சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் விபரீதம் ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article