விருதுநகர், ஜன.26: விருது நகரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பிரதி மாதம் 4வது சனிக்கிழமை நெகிழி கழிவுகளை அகற்றி அப்புறப்படுத்தும் திட்டத்தை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நெகிழி கழிவுகளை அகற்றுவது அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த உறுதிமொழியை அமைச்சர் வாசிக்க பங்கேற்ற அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அதை தொடர்ந்து கௌசிகா நதிக்கரையோரம் இருந்த நெகிழி குப்பைகளை அகற்றும் பணியில், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் ஜெயசீலன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
The post விருதுநகரில் நெகிழி கழிவு சேகரிக்கும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.