விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற மக்கள் கோரிக்கை

2 months ago 14

ஆர்.எஸ்.மங்கலம், டிச.19: திருப்பாலைக்குடியில் ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் ரோட்டின் நடுவில் உள்ள மின் கப்பத்தை அகற்றி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் ஈஜிஆர் சாலையின் சந்திப்பிற்கு அருகே சாலையின் நடுவே மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பமானது சாலையின் நடுவில் இருப்பதால், பெரும் விபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்ச நிலை பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஊருக்குள் திரும்பும் வாகனங்களோ அல்லது ஊருக்குள் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் வாகனங்களோ இந்த சாலையில் உள்ள மின் கம்பத்தை கடந்தே செல்ல வேண்டி நிலை உள்ளது. இந்த மின் கம்பம் அமைந்துள்ள பகுதியின் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி, பஸ் நிறுத்தம் மற்றும் ரேசன் கடை, சந்தை கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்டவை அமைந்துள்ளது.மின் கம்பத்தில் ஏதேனும் வாகனங்கள் மோதி விட்டால், பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மின் கம்பத்தை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு இல்லாத இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article