மாணவர்களின் கல்வியில் திமுக அரசு தலையிட வேண்டாம் - தமிழிசை வேண்டுகோள்

4 hours ago 1

சென்னை: மாணவர்களின் கல்வியில் திமுக அரசு தலையிட வேண்டாம் என தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாஜக சார்பில் சென்னை விருகம்பாக்கம், தி.நகர் உள்பட 6 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், பழங்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பாஜகவை பார்த்து சூரியன் அச்சப்படும் காலம் வந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி விவாகரத்து கூட்டணி போல போய் கொண்டிருக்கிறது. பாஜக கூட்டணி நல்ல குடும்பம் போல மகிழ்ச்சியாக இருக்கிறது. பாஜக பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கிறது என்றும், இண்டியா கூட்டணி பலம் இழந்த கூட்டணியாக இருக்கிறது என ப.சிதம்பரம் கூறுகிறார். ப.சிதம்பரம், சசி தரூர் என எதிர்கட்சிகளும் பாஜகவை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

Read Entire Article