விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும்: முதல்வரிடம் பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கை

2 months ago 10

விருதுநகர்: விருதுநகர் அடுத்த கன்னிசேரிபுதூர் மேலசின்னையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கு சென்ற முதல்வர், அங்கு ரசாயன பொருட்கள் வைக்கும் அறை, உற்பத்தி அறை ஆகியவற்றை ஆய்வுசெய்து, தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பட்டாசு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று விருதுநகர் வந்தார்.

Read Entire Article