
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக திருவிழா நாட்கள், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் விடுமுறை நாட்களிலும் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
அவ்வகையில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடுவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். புனித நீராடியபின்னர் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை செல்லக்கூடிய வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தன.