திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சீமான் நேற்று கூறியதாவது: பெரியாரைப் பற்றி நாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு வருகிறோம். தமிழ் மொழி, நாயன்மார்கள், ஆழ்வார்கள், பக்தி இலக்கியம், வள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள் பற்றி பெரியார் கூறிய கருத்துகளே இதற்கான ஆதாரம். அவர் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார். எந்த மொழியில் அவர் அதைக் கூறினார். நாங்கள் வெளியிட்டுள்ள ஆதாரம் போதவில்லையென்றால், இன்னும் வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.