சென்னை: எல்லோரும் படிக்க வேண்டும் சொன்னால் அது திராவிட மாடல் என்றும் இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது பாஜக என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புத்தகத்தின் முதல் பிரதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கோபாலகவுடா, முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். புத்தகத்தை வெளியிட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியதாவது; பள்ளிக்கல்வித்துறை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு திட்டங்களும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. 234 தொகுதிகளிலும் பள்ளிகளை ஆய்வு செய்த ஒரே அமைச்சர் அன்பில் மகேஷ்.
ஆண்டுதோறும் பொதுத் தேர்வு முடிவு தேர்ச்சி விகிதங்கள் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமாக இந்த ஆட்சியை மாற்றி உள்ளார். துணிச்சலோடு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் அன்பில் மகேஸ். ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி கொள்கையை விட்டு தர மாட்டோம். கல்வியில் சிறந்த தமிழ்நாட்டினை நாசப்படுத்திட புதியக் கல்வி கொள்கையை கொண்டு வந்தது ஒன்றிய அரசு.
கல்வியை காவியமயமாக்க கொண்டு வரப்பட்டதுதான் தேசிய கல்விக் கொள்கை. எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது திராவிட மாடல். இன்னார்தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் அதுதான் பாஜக என்று சென்னையில் நடைபெற்று வரும் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
The post எல்லோரும் படிக்க வேண்டும் சொன்னால் அது திராவிட மாடல்; இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது பாஜக; முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.