
திருச்சி,
திருச்சியில் வருகிற 31-ஆம் தேதி விசிக சார்பில் 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பெயரில் மாபெரும் எழுச்சி பேரணி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இதற்கான மண்டல வாரியான ஆய்வு கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில், திருச்சியில் வருகிற 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த விடுதலை சிறுத்தைகள் பேரணி ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.