விகேபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணம் வழங்கல்

1 month ago 10

விகேபுரம்,டிச.7: விகேபுரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் வழங்கினார். விகேபுரம் நகராட்சியில் 36 நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு வேலை செய்வதற்கு தேவையான கையுறை, ஷூ, தலையில் அணியக்கூடிய இரும்பு தொப்பி உள்ளிட்ட உபகரணங்களையும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை நலவாரியம் உறுப்பினர் புத்தகங்களையும் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் வழங்கினார். இதில் நகராட்சி மேலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு கவுன்சிலர்கள் ராமலட்சுமி, அருள் மணி, விக்னேஷ் மற்றும் ராஜேந்திரன், ஜெயராம், மகேந்திரன் கலந்து கொண்டனர்.

The post விகேபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணம் வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article