பாவூர்சத்திரம்,ஜன.8: பாவூர்சத்திரம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பாவூர்சத்திரம் அருகே கரிசலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோசல்ராம் மகன் லட்சுமி கெங்கராஜன்(29). இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று லெட்சுமி கெங்கராஜன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதன் பின்னர் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லெட்சுமி கெங்கராஜன் இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாலிபர் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.