வேலூர், மார்ச் 23: வேலூரில் போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது. வேலூர் கணியம்பாடி சூளைமேடு தெருவை சேர்ந்தவர் பாலவிநாயகம்(37). அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன்(எ) தக்காளி. இருவரும் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி இரவு நண்பர்களான இவர்கள் 2 பேரும் கணியம்பாடி ஒயின்ஷாப்பிற்கு மது அருந்த சென்றுள்ளனர். இருவரும் அங்கு அமர்ந்து ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தார்களாம். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சரவணன், தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் பாலவிநாயகத்தின் தோளில் குத்தியுள்ளார். இந்த தாக்குதலால் அலறி துடித்த பாலவிநாயகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலவிநாயகம் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன்(எ) தக்காளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து appeared first on Dinakaran.