
மேஷம்
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற உண்மையை உணர்ந்த மேஷம் ராசியினருக்கு இவ்வாரம் அலைச்சல்களுக்கு பின்னர் காரிய வெற்றி ஏற்படும். தைரியஸ்தான சூரியன், லாப ஸ்தான ராகு நன்மைகளை தருவார்கள்.ரெஸ்டாரன்ட், லாட்ஜ், தோல் பொருள் தயாரிப்பு தொழில் துறையினர் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உரம், எண்ணெய், இரும்பு, கட்டிடப் பொருள் வியாபாரிகள் வழக்கத்தை விட குறைவாக கொள்முதல் செய்வது நல்லது. தனியார் உத்தியோகஸ்தர்கள் இனிய சூழலில் பணியாற்றுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய பணிகளை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசு துறை, தனியார் அறக்கட்டளை பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் ஆசிகளை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.வயிற்று வலி, இடுப்பு வலி, முதுகு வலி ஆகியவை ஏற்பட்டு சிகிச்சை மூலம் நீங்கும். தூய்மைப் பணியாளர்கள், செருப்பு தைப்பவர்களுக்கு அன்னதானம் அல்லது பொருள் தானம் செய்தால் நன்மை ஏற்படும்
ரிஷபம்
ஆயிரம் மைல் பயணமானாலும் முதல் மைலில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற என்பதை உணர்ந்த ரிஷபம் ராசியினருக்கு இவ்வாரம் புதிய நம்பிக்கைகள் ஏற்படும். தன ஸ்தான குரு, லாப ஸ்தான சனி மன விருப்பங்களை நிறைவேற்றுவார்கள்.போக்குவரத்து, இன்ஜினியரிங், சாப்ட்வேர் தொழில்துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். ஏஜென்சி, ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, கன்சல்டன்சி, ரசாயன பொருள் வியாபாரிகள் சிக்கல்கள் விலகி லாபம் அடைவர். அரசு உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் பாராட்டு பெறுவார்கள்.ரியல் எஸ்டேட் துறையினர் அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் கணினி, மருந்து தயாரிப்பு நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.கை கால் வலி, முட்டி வலி, ரத்த அழுத்தம், உடல் அசதி ஆகியவை ஏற்பட்டு விலகும். நண்பர்கள் அல்லது வாழ்க்கை துணைக்கு பரிசுகள் அளிப்பதால் நன்மைகள் ஏற்படும்.
மிதுனம்
மற்றவர்களுக்கு செய்வது நமக்கே திரும்ப வரும் என்பதை சொந்த வாழ்வில் உணர்ந்த மிதுனம் ராசியினருக்கு இவ்வாரம் மனதில் புதிய எண்ணங்கள் உருவாகும். லாப ஸ்தான சுக்கிரன் ஆடை ஆபரண வண்டி வாகன சேர்க்கை ஏற்படுத்துவார்.ஏஜென்சி, கலைத்தொழில், கணினி தொழில்துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். பெட்ரோல் பங்க், பால் வியாபாரம், உதிரிபாக வியாபாரிகள் சமூக மதிப்பை பெறுவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று செயல்படுவர்.ரியல் எஸ்டேட் துறையினர் வியாபார விருத்தி அடைவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் விமான போக்குவரத்து, ரியல் எஸ்டேட், தங்க நகை தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலம் லாபம் அடையலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள்.மன உளைச்சல், உழைப்பு காரணமாக அசதி ஏற்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்தால் நன்மைகள் ஏற்படும்.
கடகம்
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்ற உண்மையை அறிந்த கடகம் ராசியினர் இவ்வாரம் முயற்சிகளில் தடைகளை சந்தித்து வெற்றி பெறுவர். பனிரெண்டாம் இட சூரியன் குரு வெளிநாட்டு தொடர்புகளை தருவார்கள்.லேத் பட்டறை, செங்கல் தயாரிப்பு, மருத்துவத்துறை, உபகரண தயாரிப்பு தொழில்துறையினர் அரசு ஆதாயங்களை பெறுவார்கள். திரவப் பொருள் விற்பனை, உதிரிபாக விற்பனை, இரும்பு மற்றும் கட்டிட பொருள் வியாபாரிகள் தடை தாமதங்களை சந்தித்து விடுபடுவர். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று செயல்படுவார்கள்.ரியல் எஸ்டேட் துறையினர் நடந்து வரும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் இயற்கை எரிவாயு, வேளாண் விளைபொருள், மருத்துவமனை பங்குகள் மூலம் லாபம்பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர்.கைகால் வலி, உடல் அசதி ஏற்பட்டு சரியாகும். ஆதரவற்ற வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு ஆடை தானம், அன்னதானம் செய்தால் நன்மைகள் ஏற்படும்.
சிம்மம்
உண்மை தோற்பதும், பொய் ஜெயிப்பதும் தற்காலிகம் என்ற உண்மையை உணர்ந்த சிம்மம் ராசியினருக்கு இவ்வாரம் சமூக அந்தஸ்தும், மதிப்பும் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள குரு சூரியன் அரசு தரப்பு நன்மைகளை தருவார்கள்.ஆடை ஆபரணம், நிதி நிறுவனம், ரெஸ்டாரன்ட் தொழில்துறையினர் புதிய மாற்றங்களை செய்து முன்னேறலாம். கொடுக்கல்-வாங்கல், ஸ்வீட் ஸ்டால், கவிஞர்கள், கால்நடை வியாபாரிகள் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்வர். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணி உயர்வை பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய இடங்களில் கட்டுமான பணிகளை தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மின்சார தயாரிப்பு நிறுவனங்கள், எலக்ட்ரிக்கல் உபகரண தயாரிப்பு நிறுவனங்கள், ஹோட்டல் ஆகிய பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம்.வயதானவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது மற்றும் மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை வழி மற்றும் தாய் வழி மாமா உறவினர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் அவர்களுடைய ஆசிகளை பெறுவதும் பல நன்மைகளை தரும்.
கன்னி
பாத்திரம் அறிந்து பிச்சை இடவேண்டும் என்பதை வாழ்வின் ஆதாரமாக கொண்ட கன்னி ராசியினருக்கு இவ்வாரம் நீண்ட நாள் கனவு பலிக்கும். லாப ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி வெற்றிகளை வழங்குவார்.தகவல் தொடர்பு, புத்தகம், கணக்கு வழக்கு, தணிக்கை தொழில்துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். ஸ்பேர் பார்ட்ஸ், பலசரக்கு கடை, புத்தக வியாபாரம், மளிகை வியாபாரிகள் வர்த்தக விரிவாக்கம் செய்வர். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் கடன் பெற்று செலவுகளை சமாளிப்பர்.ரியல் எஸ்டேட் துறையினர் புதிய அடுக்குமாடி கட்டுமான பணிகளில் பிஸியாக இருப்பார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மண்மனை விற்பனை, வாகன விற்பனை, சமூக சேவை நிறுவன பங்குகள் மூலமாக தான் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வர்.நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனாதை ஆசிரமங்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்களை தானமாக அளிப்பதால் நன்மைகள் ஏற்படும்.
துலாம்
கடமையை செய்தால் பலன் தாமாக வரும் என்ற தத்துவத்தை மனதில் கொண்டு செயல்படும் துலாம் ராசியினருக்கு இவ்வாரம் தன வரவு அதிகரிக்கும். ராசியை பார்க்கும் ராசி அதிபதி மன விருப்பங்களை நிறைவேற்றுவார்.பால் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி, வேளாண்மை தொழில்துறையினர் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார்கள். சரக்கு போக்குவரத்து, ஓட்டல், உணவு பொருட்கள் வியாபாரிகள் வியாபார விருத்தி அடைவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவர்.ரியல் எஸ்டேட் துறையினர் அடுக்குமாடி கட்டிட திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மின்சாரம், கணினி, அறக்கட்டளை நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு பாடங்களை படிக்க வேண்டும்.அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு விலகும். ஆசிரியர்களுக்கு பரிசுகள் கொடுத்து அவர்களுடைய ஆசிகளை பெறுவது நன்மைகளை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
அவரவர் வேலையை அவரவர் செய்தால் எந்த பிரச்சினையும் வராது என்ற கொள்கை கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இவ்வாரம் எண்ணிய காரியங்கள் நடந்தேறும். ராஜ்ய ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி கௌரவத்தை ஏற்படுத்துவார். இரும்பு, நெருப்பு, மருத்துவ தொழில் துறையினர் நல்ல வளர்ச்சி காண்பார்கள். அரசியல், தையல், சிறு தொழில் வியாபாரிகள் நீண்ட நாளாக எதிர்பார்த்த முன்னேற்றம் வந்து சேரும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை கவனமாக செய்து வர வேண்டும்.ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பொதுத்துறை நிறுவனங்கள், மருத்துவமனை, கல்வி நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம்.வெளியிடங்களில் சுகாதாரமற்ற நிலையில் பானங்களை பருக வேண்டாம். ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு பொருளாகவோ அல்லது ஆடைகளாகவோ தானம் செய்வதன் மூலம் நன்மைகள் உண்டு.
தனுசு
மாற்றம்தான் என்றுமே மாறாதது என்ற தத்துவத்தை கடைபிடிக்கும் தனுசு ராசியினருக்கு இவ்வாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். சூரியன், குரு ஆகிய கிரகங்கள் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவார்கள்.ஆடிட்டிங், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆசிரியர் தொழில்துறையினர் தொழில் சார்ந்த நன்மைகளை பெறுவார்கள். சிறு தொழில் வியாபாரிகள், வேளாண் விலை பொருள் வியாபாரிகள், பல சரக்கு வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பர். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை எதிர்கொள்வர்.ரியல் எஸ்டேட் துறையினர் நடந்து வரும் கட்டுமான பணிகளை கவனமாக மேற்பார்வை செய்ய வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஆடை ஆபரணம், தங்க நகை, வாகனம் தயாரிப்பு நிறுவன பங்குகளில் ஆதாயம் அடையலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.அடிவயிற்றில் அல்லது மார்பில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். வயதான தம்பதிகளுக்கு பரிசளித்து ஆசிகளை பெறுவதும், புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இனிப்பு, மலர்கள் ஆகியவற்றை பரிசாக கொடுப்பதாலும் நன்மைகள் சேரும்.
மகரம்
இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்ற உண்மையை உணர்ந்த மகரம் ராசியினர் இவ்வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி அடைவர். சுக்கிரன், புதன் ஆகியோர் மன மகிழ்ச்சியையும், நண்பர்கள் மூலம் நன்மையையும் தருவார்கள். அழகு பொருள் தயாரிப்பு, தங்கம் வெள்ளி உற்பத்தி, நிதித்துறை, ரியல் எஸ்டேட் தொழில்துறையினருக்கு லாபகரமான காலம். அழகு நிலையம், கவிஞர்கள், கலைத்துறையினர், வட்டி தொழில், சொகுசு பொருள் வியாபாரிகள் புது கிளைகளை தொடங்குவர். உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த லாபங்களை அடைவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அழகு சாதன தயாரிப்பு நிறுவனங்கள், தங்க நகை மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவன பங்குகளில் லாபம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதுமையாக சிந்தித்து, திறமையாக செயல்படுவர். காய்ச்சல், கை கால் வலி ஏற்பட்டு சிகிச்சை மூலம் குணமடையும். தூய்மை பணியாளர்கள், உடல் ஊனமுற்றோர், வயது முதிர்ந்தோருக்கு தேவையான உதவிகளை பொருளாக, உணவாக வழங்கினால் நன்மைகள் உண்டு.
கும்பம்
கடமை கண் போன்றது என்ற கொள்கையை மனதில் கொண்டு செயல்படும் கும்பம் ராசியினருக்கு இவ்வாரம் எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். பஞ்சம ஸ்தானத்தில் உள்ள குரு பல வெற்றிகளை தருவார்.லேத் தொழில், விவசாயம், ஆன்மீகம், மின்சார உபகரண உற்பத்தி தொழில் துறையினர் வளர்ச்சி பெறுவார்கள். மளிகை கடை, உணவகம், ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை வியாபாரிகள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறலாம். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும்.ரியல் எஸ்டேட் துறையினர் சற்று காலதாமதம் ஆனாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மின்சாரம், கணினி, தகவல் தொடர்பு நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர்.அடிவயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் அகலும். தந்தை வழி உறவினர்களுடன் சுமுகமாக நடந்து கொள்வதும் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதும் நன்மைகளை தரும்.
மீனம்
பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழியை மனதில் கொண்டு செயல்படும் மீனம் ராசியினருக்கு இவ்வாரம் மனதிற்கு இனிய சம்பவங்கள் நிகழும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் எடுத்த காரியத்தில் வெற்றியை அளிப்பார்.டிம்பர் டிப்போ, பணம் கொடுக்கல் வாங்கல், மோட்டார் உபகரண தயாரிப்பு தொழில்துறையினருக்கு நல்ல ஆதாயம் ஏற்படும். கட்டிட பொருள் வியாபாரம், எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை, திரவப்பொருள் வியாபாரிகளுக்கு லாபகரமான காலகட்டம். அரசு உத்தியோகஸ்தர்கள் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் கவனிப்பது நல்லது.ரியல் எஸ்டேட் துறையினர் கார்ப்பரேட் நிறுவன கட்டுமான பணிகளில் நல்ல லாபம் பெறலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஏற்றுமதி இறக்குமதி நிறுவன பங்குகள், கல்வித்துறை மற்றும் திரவப்பொருள் உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் லாபம் அடையலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி மற்றும் பணி வாய்ப்புகள் உருவாகும். ஜலதோஷம், இருமல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். உடன் பிறந்த சகோதர சகோதரிகள்,
