
பாட்னா,
பீகாரின் பாட்னா நகரில், வசித்து வரும் டீன்-ஏஜ் சிறுமி இன்ஸ்டாகிராம் வழியே மாணவர் ஒருவருடன் நட்பு ஏற்படுத்தி கொண்டார். அவருடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். இந்த மாணவரின் மூலம் 3 மாணவர்கள் சிறுமிக்கு அறிமுகம் ஆனார்கள்.
இந்த மாணவர்கள் அனைவரும் 8 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வருபவர்கள் ஆவர். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களில் ஒருவரின் வீட்டுக்கு அந்த சிறுமி சென்றுள்ளார். அப்போது அவருடன் நெருங்கி பழகியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து அந்த சிறுமியிடம் கொத்வாலி பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி கூறியுள்ளனர். சிறுமியும் அவர்களுடைய பேச்சை நம்பி ஓட்டலுக்கு சென்றார்.
அப்போது, அந்த 3 மாணவர்களும் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததும், அத்துமீறிய அவர்கள் சிறுமியை கும்பல் பலாத்காரம் செய்தனர்.
இதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்த அந்த சிறுமி குடும்பத்தினரிடம் நடந்த விசயங்களை கூறி அழுதுள்ளார். இதன்பின்பு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி 4 சிறுவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.