வானிலை முன்னெச்சரிக்கை: அரசின் ‘TN-Alert’ செயலி அறிமுகம்

7 months ago 48

சென்னை: பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் ‘டிஎன் அலர்ட்’ செயலியை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த செப்.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான ‘டிஎன் அலர்ட்’ செயலி குறித்து முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, இந்த செயலியை இன்று எழிலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிட்டார்.

Read Entire Article