வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் வியாழக்கிழமை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

4 months ago 12

சென்னை: தமிழகத்தில் நாளை (நவ.14) 21 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. அதனுடன் தொடர்புடைய மேல் காற்றழுத்த சுழற்சியானது தற்போது வட தமிழ்நாட்டின் தென்மேற்கு வங்கக் கடலில் உள்ளது. தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள கடற்கரையில் காற்றின் மேலடுக்கு சுழற்சியானது தற்போது தென்கிழக்கு அரபிக்கடலில் உள்ளது.

Read Entire Article