வாசுதேவநல்லூர் அருகே புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

2 months ago 8

சிவகிரி,நவ.10: வாசுதேவநல்லூர் அருகே சங்குபுரம் காமராஜர் காலனியில் உள்ள வீடு ஒன்றில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ேநற்று வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் கந்தன் மகன் மாடசாமி (50) என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மூடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாடசாமியை கைது செய்த போலீசார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 598 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பாளை சிறையில் அடைத்தனர்.

The post வாசுதேவநல்லூர் அருகே புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article