சென்னை: கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லாரிகளில் கால்நடைகள் நிற்க போதுமான இடவசதியுடன் கொண்டு செல்ல வேண்டும். முறையான காற்று வசதியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும். முறையான ஆவணங்களுடன் மட்டுமே கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
The post வாகனங்களில் கால்நடை கொண்டுசெல்ல விதிமுறைகளை வகுத்து ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.