வாகன சோதனையில் ₹52,000 அபராதம் வசூல்

6 months ago 30

நல்லம்பள்ளி, அக்.11: தொப்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கின்றது. எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையை முடுக்கி விட்டனர்.வெள்ளக்கல் சுங்கச்சாவடி மற்றும் பாளையம் புதூர், சேஷம்பட்டி, தொப்பூர் சோதனைச்சாவடி பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களுக்கு முறையாக இன்சூரன்ஸ் இல்லாமல் இருப்பது, டிரைவர்கள் சீருடை அணியாதது, ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டி வந்தது தொடர்பாக 52 வாகனங்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். வாகனங்களுக்கு தலா ₹1000 வீதம் மொத்தமாக ₹52 ஆயிரம் அபராதம் வசூல் செய்தனர்.

The post வாகன சோதனையில் ₹52,000 அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Read Entire Article