“இஸ்லாமியர்களை 2-ம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சி” - சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

1 day ago 3

மதுரை: புதிய வக்பு சட்ட மசோதா இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சி என மதுரையில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.

மதுரையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பபெறு வலியுறுத்தி மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் தெற்குவாசல் மார்கெட் அருகில் நடந்தது. மாவட்ட செயற்குழு அ. ரமேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் துணைத் தலைவர் கே. அலாவுதீன் முன்னாடி தொடங்கி வைத்தார். தொழிற் சங்க மையம் சிஐடியூ பொருளாளர் லூர்து ரூபி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் கண்டன உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., சிறப்புரையாற்றினார்.

Read Entire Article