வழக்குகளை இந்தியில் நடத்தக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

2 months ago 11

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்தக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்த வேண்டும் என்று கிஷன் சந்து ஜெயின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில்; நீதிபதிகள் இந்தியில் மட்டும் ஏன் வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உச்சநீதிமன்றம் பல்வேறு மாநிலங்களிலிருந்து தாக்கல் செய்யக்கூடிய வழக்குகளை விசாரிக்கிறது. அப்படியானால் அனைத்து மாநில மொழிகளிலும் வழக்கு விசாரணையை நடத்த முடியுமா? என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

The post வழக்குகளை இந்தியில் நடத்தக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article