வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி

3 days ago 3

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவர்கள் எழுதினார்கள். இதில், மாணவிகள் 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 பேர், மாணவர்கள் 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 பேர் ஆவார்கள்.

இருபாலரிலும் மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர். அதாவது, 95.03 சதவீதம் பேர் வெற்றி வெற்றுள்ளனர். இதில், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.70 (4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர்) ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.16 (3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர்) ஆகும். அதாவது, மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article