வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு 11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

2 hours ago 2

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வள்ளலார் நினைவு தினமான வரும் 11ம் தேதி அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏ), எப்எல்3(ஏஏ) மற்றும் எப்எல்11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்படும். 11ம் தேதி (செவ்வாய் கிழமை) அன்று வள்ளலார் நினைவு தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

The post வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு 11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article