சென்னை: மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது குறித்து பிப்.14-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாதது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டது.