வல்லிபுரம்-ஈசூர் இடையே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. இங்கு, கோடைக்காலம் நிறைவடைவதற்குள் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க சுற்றுப்புற கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வல்லிபுரம் மற்றும் ஈசூர் இடையே அமைந்துள்ள பாலாற்றை கடந்து செல்வதற்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக திருக்கழுக்குன்றம் மற்றும் கருங்குழி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் இந்த தரைப்பாலம் உட்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்தன.