வலங்கைமான், பிப். 25: வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன்பெரும் விதமாக குடிநீர் பைப் ஆனது பாபநாசம் குடவாசல் சாலை வழியாக வலங்கைமான் வந்து பின்னர் கும்பகோணம், மன்னார்குடி சாலையில் செல்கிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த இனாம்கிளியூர் கடைவீதி அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு சாலையில் பெரிய அளவில் பள்ளங்களை ஏற்படுத்தி விபத்துக்களை ஏற்படும் வகையில் உள்ளது.எனவே கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பினை சரி செய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வலங்கைமான் அருகே வீணாகும் வேதாரண்யம் கூட்டு குடிநீர் appeared first on Dinakaran.