கோவை: கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு உடனே எடுக்கப்பட வேண்டும் என பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட (பிசி மற்றும் எம்பிசி) சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு - ஓபிசி ரைட்ஸ் சார்பில், மாநில உயர்நிலைக் கூட்டுக் கமிட்டி கூட்டம் கோவையில் நடந்தது. தலைவர் ரத்தினசபாபதி தலைமை வகித்தார். உப தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் திருஞானசம்பந்தம், அமைப்பாளர்கள் குணசேகரன், சர்வேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.