கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைக்க உள்ளார். மேலும், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.
The post வரும் 21, 22ம் தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு appeared first on Dinakaran.