கிழித்து வீசப்பட்ட ஆவணங்கள்; டாஸ்மாக் நிர்வாக இயக்குநரிடம் 6 மணி நேரம் அமலாக்​கத் துறை​ விசாரணை - பின்னணி என்ன?

6 hours ago 2

சென்னை: டாஸ்​மாக்​கில் ரூ.1,000 கோடி முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டிய நிலை​யில், டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநரின் வீடு உட்பட சென்​னை​யில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர். அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றும் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வீடு அருகே கிழித்து வீசப்பட்டநிலை​யில் கிடந்த சில ஆவணங்​களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தமிழக அரசின் டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடப்​ப​தாக​வும், இதில் வரி ஏய்ப்​பு, சட்​ட​விரோத பண பரிவர்த்​தனை நடந்​திருப்​ப​தாக​வும் அமலாக்​கத் துறைக்கு புகார்​கள் சென்​றன. இதன் அடிப்​படை​யில், சென்னை எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் நிறுவன தலைமை அலு​வல​கம், அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் உள்ள டாஸ்​மாக் குடோன், அப்​போது அமைச்​ச​ராக இருந்த செந்​தில் பாலாஜி​யின் நண்​பர் வீடு, அலு​வல​கங்​கள், திமுக எம்​.பி.ஜெகத்​ரட்​சக​னின் அக்​கார்டு மது​பான உற்​பத்தி நிறு​வனம், எஸ்​என்​ஜே,கால்​ஸ், எம்​ஜிஎம் உள்​ளிட்ட மது​பான உற்​பத்தி நிறு​வனங்​கள், அதன் ஆலைகளில் அமலாக்​கத் துறை கடந்த மார்ச் மாதம் தீவிர சோதனை நடத்​தி​யது.

Read Entire Article