வரும் 13ம் தேதி மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!!

3 months ago 10

சென்னை : வரும் 13ம் தேதி மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை, கோவை மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வர, பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது தமிழ்நாடு அரசு.அவ்வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் உரையின் போது, திருச்சி மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதன்படி, திருச்சியில் திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் கிராமம் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்துக்கு அருகே புதிதாக டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.திருச்சியில் 14.16 ஏக்கர் நிலத்தில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.315 கோடியில் புதிய டைடல் அமைக்கப்பட உள்ளது. தரைத் தளம் மற்றும் 6 தளங்களுடன் இது அமைய உள்ளது.

இந்த டைடல் பூங்காவில் 5000 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கம், தரவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.289 கோடியில் இது அமைய உள்ளது. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த இரண்டு டைடல் பூங்கா பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.அதனைப் பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், வரும் 13ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

The post வரும் 13ம் தேதி மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!! appeared first on Dinakaran.

Read Entire Article