சென்னை: தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் மறந்துவிடாதீர்கள். கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சித் தத்துவம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “பெண்கள் கல்வி – வேலைவாய்ப்பு பெற்று, வாழ்க்கையில் முன்னேற ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மகளிர் முன்னேற்றத்திற்கு சிறிய தடை கூட ஏற்படக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதனால்தான், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனே, விடியல் பயணம் திட்டத்தை செயல்படுத்தினேன்.