வரமுடியாத சூழ்நிலையில் விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராக நிர்பந்திக்க கூடாது: ஐகோர்ட் அறிவுறுத்தல்

3 months ago 14

சென்னை: அமெரிக்கா வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை வர இயலாததால், காணொலி காட்சி மூலம் ஆஜராகிய நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை எனக் கூறி அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்து விட்டது. இதை எதிர்த்து மனைவி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்தான் நேரில் ஆஜராவது கட்டாயம். விவாகரத்து வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர்களை குடும்பநல நீதிமன்றங்கள் நிர்பந்திக்க கூடாது. பரஸ்பரம் விவாகரத்து கோரி தம்பதியரின் பொது அதிகாரம் பெற்றவர்கள் வழக்குகளை தொடரலாம். காணொலி மூலம் வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post வரமுடியாத சூழ்நிலையில் விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராக நிர்பந்திக்க கூடாது: ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article