
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டம் கட்ராவில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்தே பாரத் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைப்பதற்கு முன் அந்த ரெயிலில் பிரதமர் மோடி ஏறினார். அப்போது அங்கு இருந்த பள்ளி மாணவ, மாணவியிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
மேலும், வந்தே பாரத் ரெயிலை இயக்கும் லோகோ பைலட் , உதவியாளரிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.