வத்திராயிருப்பு, ஏப்.10: வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மேலும் இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக 10க்கும் மேற்பட்ட மாமரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தற்போது மாங்காய் சீசன் ஆரம்பமான நிலையில் மாமரங்கள் வேரோடு சாய்ந்ததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
The post வத்திராயிருப்பு அருகே சூறைக்காற்றில் சாய்ந்த மாமரங்கள் appeared first on Dinakaran.