மாமல்லபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ரூ.100 கோடியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று பேரவையில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் நேற்று பதில் அளித்தார். பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவர் பேசியதாவது: