வடமாநில தொழிலாளி மாரடைப்பால் சாவு

4 months ago 12

கிருஷ்ணகிரி, ஜன.4: மேற்கு வங்க மாநிலம் கலப்பாரா கிராமத்தை சேர்ந்தவர் சுக்குசேக்(44). இவர் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கந்திக்குப்பம் அடுத்த ஒரப்பம் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், தனது அறையில் தங்கியிருந்த போது, சுக்குசேக்குக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, செட்டிப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் உயிரிழந்தார். இதுபற்றி கந்திக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடமாநில தொழிலாளி மாரடைப்பால் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article