புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே வடகாடு கிராமத்தில் பட்டியலினத்தவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய மண்டல ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாளை (மே 15) காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் திருவிழாவை தொடர்ந்து தலித் மக்கள் குடியிருப்பில் கும்பலாக புகுந்து தாக்கிய அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
The post வடகாடு கிராமத்தில் பட்டியலினத்தவர் தாக்கப்பட்ட விவகாரம் : புதுக்கோட்டை ஆட்சியருக்கு உத்தரவு!! appeared first on Dinakaran.