வக்ஃபு மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு

3 months ago 11

டெல்லி: ஒன்றிய அரசின் வக்ஃபு மசோதா குறித்து ஆராய அமைக்கப்பட்டு உள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலத்தொடரின் முதல் வாரத்தின் இறுதிநாளில் அறிக்கை அளிக்குமாறு குழுவுக்கு கூறப்பட்டிருந்தது. வக்ஃபு மசோதா பற்றி பரிசீலனை முடிவடையாததால் காலநீட்டிப்பு வழங்க கோரியிருந்தார் அதன் தலைவர் ஜகதாம்பிகா பால். ஜகதாம்பிகா பாலின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் காலத்தை நீட்டித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post வக்ஃபு மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article