லாரிகள் மீது பைக் மோதி மருத்துவமனை ஊழியர் பலி

4 months ago 13

 

ஆரணி, டிச.20: ஆரணி அருகே லாரிகள் மீது பைக் மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர் பரிதாபமாக பலியானார். ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்தவர் தினேஷ்(35). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ெஜய. இவர்களுக்கு 9 மாத குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் தினேஷ் வழக்கம்போல் வேலூருக்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். பின்னர், சொந்த வேலையாக சேவூருக்கு பைக்கில் சென்றார். அப்போது, அங்குள்ள உரக்கடை எதிரே விதை நெல் மூட்டைகளை இறக்கிக்கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக இவரது பைக் மோதியது. மேலும், மோதிய வேகத்தில் நிலை தடுமாறிய பைக் எதிரே வந்த பால் டேங்கர் லாரி மீதும் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட தினேஷ் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரிகள் மீது பைக் மோதி மருத்துவமனை ஊழியர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article