தொகுதி மறுவரையறை பிரச்சினையில் திமுகவை இண்டியா கூட்டணி ஆதரிக்காதது ஏன்? - எல்.முருகன் கேள்வி

3 hours ago 2

தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுகவை இண்டியா கூட்டணி தலைவர்கள் யாரும் ஆதரிக்காதது ஏன் என முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டில் நடைபெறும்’ என்று மத்திய அரசு அறிவித்தது முதலே, தமிழக முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார். ‘விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும். தென்னிந்திய மாநிலங்கள் உட்பட நாட்டில் எந்த மாநிலமும் இதனால் பாதிக்கப்படாது’ என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். ஆனாலும்கூட, ‘மக்கள்தொகை கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்கு தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக சதி செய்கிறது’ என்று ஸ்டாலின் மீண்டும் மீண்டும் உண்மைக்கு மாறாக பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல.

Read Entire Article