
சென்னை,
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை சோதனை ரீதியாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.