ரூ.277 கோடியில் கோ-ஆப்டெக்ஸ் வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அடிக்கல் நாட்டினார்

1 week ago 3

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.327.69 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள 2,404 புதிய குடியிருப்புகள், ஜவுளித் துறை சார்பில் சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் ரூ.227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகம் ஆகியவற்றுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இதுவரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 128 திட்டப் பகுதிகளில் ரூ.4,752.46 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 42,313 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article