ரூ.20 லட்​சம் வழிப்​பறி வழக்​கில் கைதான சிறப்பு எஸ்​ஐ இரு​வருக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தரவு

15 hours ago 2

சென்னை: வழிப்பறி வழக்கில் கைதான சிறப்பு எஸ்ஐ-க்கள் இருவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த டிச.15-ம் தேதி தனியார் நிறுவன ஊழியரான முகமது கவுஸ் என்பவரிடம் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் சிறப்பு எஸ்.ஐ-க்கள் ராஜாசிங், சன்னிலாய்டு மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சன்னிலாய்டு தவிர மற்ற 4 பேருக்கும் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இவர்களை திருவல்லிக்கேணி போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கெனவே ஆயிரம் விளக்கு பகுதியில் தமீம் அன்சாரி என்பவரிடம் ரூ. 20 லட்சத்தை கடந்த டிச.11-ம் தேதி வழிப்பறி செய்தது தெரியவந்தது.

Read Entire Article