சுற்றுலாத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் ஆய்வு!

12 hours ago 3

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணித்திரனாய்வு கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் தலைமையில், இன்று (11.03.2025) சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர்.கா.மணிவாசன் இ.ஆ.ப.. , சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த மாவட்ட சுற்றுலா அலுவலர்களிடம் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சுற்றுலாத்துறை பொழுதுபோக்கு சுற்றுலா. பாரம்பரிய சுற்றுலா. ஆன்மீக சுற்றுலா. பண்பாட்டு சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என பல்வேறு வகையான சுற்றுலாகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அனைத்து விதமான சுற்றுலாகளிலும் தமிழ்நாட்டில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து அவ்விடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது. தற்போது சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்லும் இடங்களில் நீங்காத அனுபவங்களை அளிக்கும் மலையேறுதல், மலைப்பகுதிகளில் தங்குதல், நீர்சறுக்கு. அலைச்சறுக்கு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட புதிய அனுபங்களை மேற்கொள்ள விரும்புகின்றார்கள்.

இவை தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாடு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகின்றது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான விமான போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் முழுமையாக தமிழ்நாட்டின் மாமல்லபுரம் கடற்கரை கோயில், ரதங்கள் மற்றும் சிற்பங்கள், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், ஐராவதீஸ்வரர் கோயில், தஞ்சை பெரிய கோயில் மற்றும் நீலகிரி பாரம்பரிய மலை ரயில் ஆகியவற்றை யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.கவிதா. சுற்றுலா ஆணையரக உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர் அதிகாரிகள் அனைத்து மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

The post சுற்றுலாத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் ஆய்வு! appeared first on Dinakaran.

Read Entire Article