ருதுராஜ் கெய்க்வாட்டின் காயம் குறித்த உண்மை என்ன..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி

4 weeks ago 6

மும்பை,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்ததுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது.

முன்னதாக சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் முதல் 5 லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் காயம் காரணமாக விலகினார். இதனையடுத்து சென்னை அணியின் கேப்டனாக மகேந்திரசிங் தோனி மீண்டும் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அவராலும் சென்னை அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து வர் முடியவில்லை.

இந்த சூழலில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய ஏ அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வாகியுள்ளார். இது பலரது மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் காயம் என்று கூறி வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட் தற்போது எப்படி இந்திய அணிக்கு தேர்வானார்? என்று இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ருதுராஜ் கெய்க்வாட்டின் காயம் குறித்த உண்மை என்ன? அவர் காயமடைந்தபோது, அவர் முழு ஐ.பி.எல். தொடரிலிருந்தும் வெளியேறினார். இருப்பினும், அவர் தற்போது இங்கிலாந்துக்கு செல்கிறார். எப்போது அவர் உடல் தகுதி பெற்றார்?

அப்படி முழு உடற்தகுதி பெற்றிருந்தால் அவர் எஞ்சியுள்ள ஐ.பி.எல். தொடரில் ஏன் விளையாடவில்லை? இப்படி பல கேள்விகள் மர்மமாக இருக்கின்றன. இது குறித்து எந்த ஒரு தெளிவும் இங்கு இல்லை. உண்மையில் என்ன நடக்கிறது? என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்று கூறினார்.

Read Entire Article