மதுரை: புதிய கழிவு நீர் சுத்திக்கரிப்பு நிலையத்தால் ராமேஸ்வரம் அகினி தீர்த்தத்தில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ராமேஸ்வரம் நகராட்சி முழுவதும் இருந்து வெளிவரும் கழிவுநீர் அக்னி தீர்த்தம் அருகே கடலில் கலக்கிறது. பக்தர்கள் புனித நீராக கருதும் அக்னி தீர்த்தம் அருகே கழிவுநீர் கலப்பதால் கடல் நீர் அசுத்தமாகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ராமேஸ்வரம் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து பதில் அளிக்கவும், நகராட்சி ஆணையர் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.