ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டாவில் நேற்றிரவு ராணுவ சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான பின்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனினும் இந்த தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை. ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகள், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வந்தன.
The post ராணுவ சீருடையில் வந்து தீவிரவாதிகள் தாக்குதல்? 2 வீரர்கள் படுகாயம் appeared first on Dinakaran.